Sunday, May 2, 2010
Wednesday, September 23, 2009
Saturday, September 19, 2009
வரம் கொடு அன்னையே !!

வரம் கொடு அன்னையே !!
உன் பிஞ்சு பாதம்
என் நெஞ்சை மிதித்து
துள்ளி விளையாட !
உன் பிஞ்சு விரல் பிடித்து
நடை பயில !
உன் மழலை சொல் கேட்டுஇவ்வுலகம் எனதான தொரு
மகிழ்ச்சியை எட்ட !
உனக்கு சோறூட்டி
நான் பசியாற !
கனவின் பேரிசையிலும்
உன் அழுகையை ரசிக்க !
இன்னும் எவ்வளவோ ஆசைகள்
வரம் கொடு அன்னையே !
அடுத்த பிறவியில்
நீ என் மழலையாய்
நான் உன் தாயாக ஜனிக்க !!
வரம் கொடு அன்னையே !!
காந்தி - வன்முறை
மன்மத லீலையில்...
கன்னிக்(கு) கவிதை
அந்த அந்தி பொழுதில்
கல்லூரி கலைகையில்
படிதாண்டி பயணித்து
உனக்காய் நான் நிற்க
சொல்லாமல் சென்ற
நின் செயலின் சிந்தைகளையும்
நின்னையும் என் எதிர்பார்பையும்
எழுதுகோலில் ஏற்றி
தலை குனிந்து மையழுதான்
என் தோழன் ....... - எழுதுகோல்
அன்று தோன்றியது,
கன்னிக்(கு) கவிதை...
"" (முதல் கவிதை ) '''
கல்லூரி கலைகையில்
படிதாண்டி பயணித்து
உனக்காய் நான் நிற்க
சொல்லாமல் சென்ற
நின் செயலின் சிந்தைகளையும்
நின்னையும் என் எதிர்பார்பையும்
எழுதுகோலில் ஏற்றி
தலை குனிந்து மையழுதான்
என் தோழன் ....... - எழுதுகோல்
அன்று தோன்றியது,
கன்னிக்(கு) கவிதை...
"" (முதல் கவிதை ) '''
Subscribe to:
Posts (Atom)


