
வரம் கொடு அன்னையே !!
உன் பிஞ்சு பாதம்
என் நெஞ்சை மிதித்து
துள்ளி விளையாட !
உன் பிஞ்சு விரல் பிடித்து
நடை பயில !
உன் மழலை சொல் கேட்டுஇவ்வுலகம் எனதான தொரு
மகிழ்ச்சியை எட்ட !
உனக்கு சோறூட்டி
நான் பசியாற !
கனவின் பேரிசையிலும்
உன் அழுகையை ரசிக்க !
இன்னும் எவ்வளவோ ஆசைகள்
வரம் கொடு அன்னையே !
அடுத்த பிறவியில்
நீ என் மழலையாய்
நான் உன் தாயாக ஜனிக்க !!
வரம் கொடு அன்னையே !!

No comments:
Post a Comment